26th November 2023 22:38:28 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 20 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை ‘ஷாஷனாலோக’ விகாரை மற்றும் பல்லகஸ்வெவ விகாரையில் வருடாந்த ‘'கத்தின சீவர’யை நடாத்துவதற்காக தமது பணியாளர்களுக்கு உதவிகளை வழங்கினர்.
துறவிகள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி 12 வது காலாட் படைப்பிரிவு படையினர் இரு விகாரை வாளகங்களையும் தூய்மைபடுத்தி, தேவையான ஏற்பாடுகளை தயார் செய்தனர். பொதுமக்களும், பக்தர்களும், கிராம மக்களும் படையினருடன் இப் பணியில் இணைந்துகொண்டனர்.