24th October 2023 23:10:47 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவு கட்டளைப் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்குப் பணிபுரியும் 19 அதிகாரிகள் மற்றும் 29 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் அடங்கிய குழு 2023 ஒக்டோபர் 17 முதல் 19 வரை படைப்பிரிவு வளாகத்தில் மூன்று நாள் நீண்ட உளவியல் ஆலோசனைப் பட்டறையில் கலந்து கொண்டனர்.
மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் கருத்திற்கமைய அடிப்படையில் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் மனநலப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவர்களை மீட்புக்காக உதவக்கூடிய பயிற்றுவிப்பாளர்களை சீர்ப்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசேட உளவியலாளர் பிரிகேடியர் (டாக்டர்) ஆர்.எம். மொனராகலை யுஎஸ்பீ மற்றும் உளவியலாளர்கள் குழுவினால் நடத்தப்பட்ட செயலமர்வின் முடிவில் பங்குபற்றிய அனைவரும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.