Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2023 09:55:48 Hours

12 வது காலாட் படைப்பிரிவு படையினரால் வெள்ள அவசர நிவராணம் வழங்கல்

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப் பிரிவு படையினர் திங்கட்கிழமை (நவம்பர் 27) மாலே கொலனி, ருஹுனு தியகம, லியங்கஸ்தோட்டை, பொலியார்வத்தை, மற்றும் பொலான ஆகிய அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் 350க்கும் மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவசர நிவாரணம் வழங்கினர்.

12 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சிஎஸ் முனசிங்க டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றியதுடன், வெள்ளம் குறையும் வரை அவர்களுக்கு உணவு, மாற்று இடங்கள், உலர் உணவுகள் மற்றும் பிற வசதிகளை வழங்க நடவடிக்கை எடுத்தனர்.