Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2023 21:21:30 Hours

12 வது காலாட் படைப்பிரிவினரால் 'எசல பெரஹெரா' மற்றும் பாத யாத்திரிகளுக்கு உதவி

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீபீஏ பீரிஸ் எச்டிஎம்சி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின்படி மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் ஒன்பது அதிகாரிகள் மற்றும் 243 சிப்பாய்கள் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் ஜூன் 12 முதல் ஜூன் 30 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற கதிர்காமம் திருவிழாவிற்கான பாதுகாப்பு, பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ உதவி, உணவு, தற்காலிக கூடாரங்கள் மற்றும் முகாம்கள் போன்றவற்றை அமைத்து உதவினர்.

12 வது காலாட் படைப்பிரிவின் படையலகுகளின் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையில்ஜூலை 1-3 திகதி வரை யால தேசிய பூங்கா சரணாலயத்தை கடந்த 27,000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ஒன்பது அதிகாரிகள் மற்றும் 243 சிப்பாய்கள் பாதுகாப்பு அளித்தனர்.

கதிர்காம திருவிழாவிக்கு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கு வருடாந்த பாத யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.