26th June 2023 21:44:38 Hours
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) இராணுவத் தலைமையகத்தில் ‘இலங்கையின் வரலாறு மற்றும் சமயப் பின்னணி’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற பெறுமதிமிக்க மற்றும் அறிவூட்டும் அமர்வொன்றில் 12 வது கஜபா படையணி படையினர் மற்றும் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் பங்குபற்றினர்.
இராணுவத்தினரிடையே சுயகௌரவம், வரலாறு மற்றும் சமயப் பின்னணிகள் பற்றிய அறிவை ஊக்குவிக்கும் மற்றும் புகுத்தும் நோக்கத்துடன் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 05 அதிகாரிகள் மற்றும் 85 சிப்பாய்கள் இவ் விரிவுரையில் பங்குபற்றினர்.
10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஐஜீஆர் தம்மிக்க அவர்கள் இவ் அமர்வினை நடாத்தினார்.