11th April 2024 14:47:17 Hours
12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் எச்எம்வீபீ ஹேரத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையலகின் படையினர் 2024 ஏப்ரல் 06 ஆம் திகதி கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தொப்பிகலையில் வசிக்கும் 145 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 6000.00 மதிப்புள்ள பாடசாலை உபகரண பொதிகள் வழங்கப்பட்டன. நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த நன்கொடையாளர்களான திரு.ரணில் பெர்னாண்டோ, திரு.ஜிவந்த பெர்னாண்டோ, திரு.டெரன்ஸ் பெர்னாண்டோ மற்றும் திரு.டைரோன் மெண்டிஸ் ஆகியோர் இந்த நன்கொடைக்கு அனுசரணை வழங்கினர்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்பீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.