04th December 2023 19:34:05 Hours
சிறந்த உறவுகளை மேம்படுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) 51வது காலாட் படைப்பிரிவின் சிமிக் பூங்கா விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நட்பு ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ள யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப் பிரிவின் படையினரால் யாழ் குடாநாட்டின் விளையாட்டுக் கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன.
நாள் முழுவதும் நடைபெற்ற இப்போட்டியில் 04 கனிஷ்ட அணிகள் உட்பட 12 உள்ளூர் கழக அணிகள் பங்கேற்றன. இப் போட்டியில் உதயசூரியன் காற்பந்து அணி சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் ஸ்டார் காற்பந்து கழக அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
கனிஷ்ட பிரிவில், திருக்குமரன் கனிஷ்ட காற்பந்து அணி சாம்பியன்ஷிப்பை வென்றது, அண்ணா ஸ்டார் கனிஷ்ட காற்பந்து அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இந் நிகழ்வில் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யுபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதி போட்டியை பார்வையிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் பணப்பரிசுகளையும் வழங்கினார்.
இந் நிகழ்வில் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.