Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th December 2023 20:00:49 Hours

11 வது விஜயபாகு படையினரால் வல்வெட்டித்துறை சனசமூக நிலையம் மற்றும் பாடசாலைகளுக்கு நன்கொடை

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கலைவாணி பாலர் பாடசாலையின் 28 சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் கலைவாணி சனசமூக நிலையத்திற்கு 30 கதிரைகளையும் திங்கட்கிழமை (டிசம்பர் 06) நன்கொடையாக வழங்கினர்.

வல்வெட்டித்துறையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை படையினர் எடுத்துகாட்டியதனை அடுத்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள ‘சாக்யா இளைஞர் குழு’ இரு நன்கொடைகளுக்கும் படையினரின் வேண்டுகோளின் பேரில் அனுசரணை வழங்கியது.

இந் நிகழ்வின் போது ஒவ்வொரு பிள்ளைக்கும் தலா ரூபா. 1,100/= மதிப்புள்ள பாடசாலை உபகரண பொதி வழங்கப்பட்டது. மேலும் தலா ரூபா 1200/= பெறுமதியான 30 கதிரைகள் கலைவாணி சனசமூக நிலையத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது.

521 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்எச்ஆர் பெர்னாண்டோ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் 11 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியுடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.