19th April 2024 20:06:53 Hours
11 வது காலாட் படைப்பிரிவு படையினர் மனித நலத் திட்டத்தின் கீழ், முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தேசமான்ய ஜே.ஈ டெனிஸ் பெரேரா வீஎஸ்வீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் குடும்பத்தின் அனுசரணையில் கல்தண்ட, வெலிமடை பிரதேசத்தில் தேவையுடைய குடும்பத்திற்கு 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் ஒருங்கிணைப்பில் புதிய வீட்டை நிர்மாணித்து 15 ஏப்ரல் 2024 அன்று நடைபெற்ற நிகழ்வின் போது பயனாளிக்கு கைளித்தனர்.
17 வது இலங்கை பொறியியல் படையணி, 8 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி மற்றும் 2 வது இலங்கை ரைபிள் படையணி படையினரின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவள உதவியில் 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி இந்த வீட்டை நிர்மாணிக்க முயற்சி எடுத்தார்.
வீடு வழங்கும் நிகழ்வின் போது, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களினால் வீட்டுச் சாவிகள் பயனாளிக்கு அடையாளமாக கையளிக்கப்பட்டது.