13th September 2023 08:17:53 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின், 52 வது காலாட் படைப்பிரிவின், 11 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 09) அக்கரை கரையோரப் பகுதியில் சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
அனைத்து கழிவுப்பொருட்கள், மாசுபடுத்தும் பொருட்களையும் சேகரிக்கும் பணியில் படையலகின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தீவிரமாக பங்கேற்றினர். இத்திட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவளித்தனர்.