05th June 2023 19:29:32 Hours
கண்டி பல்லேகலை 11 வது காலாட் படைபிரிவு தலைமையக வளாகத்தில் வெளியேறும் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான ஜெனரல் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 04) இராணுவ சம்பிரதாய முறைகளுக்கமைய 11 வது காலாட் படைபிரிவு படையினரால் பிரியாவிடை மரியாதை வழங்கப்பட்டது.
முதலில், 10 வது கஜபா படையணியின் படையினரால் தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் அணிவகுப்பு மரியாதையும் வழுகப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரியாவிடை ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
அன்றைய நிகழ்விற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில் வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்ட கோப்ரல் கழக கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுடன் குழு படம் எடுத்தல் படையினருக்கான உரை அனைத்து நிலையினருடனான தேனீர் விருந்துபசாரம் என்பவற்றிலும் கலந்துக்கொண்டார்.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தற்போது நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.