Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2024 15:44:34 Hours

11 வது இலங்கை சிங்க படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

11 வது இலங்கை சிங்க படையணி படையினர் காத்தான்குடி பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து 2024 ஏப்ரல் 02 ஆம் திகதி நடைபெற்ற விழாவின் போது கையளித்தனர்.

11 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டி.எம்.என் பத்மசிறி அவர்களின் மேற்பார்வையின் கீழ் பிரதேசவாசிகளின் அனுசரணையில் 11 வது இலங்கை சிங்க படையணி படையினர் இந்த வீட்டை நிர்மாணித்தனர்.

நடைபெற்ற நிகழ்வின் போது, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களினால் வீட்டின் சாவி குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 243 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சில பொது மக்களும் கலந்துகொண்டனர்.