31st January 2024 19:52:53 Hours
11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் 125 ஏழை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ் காரைநகரில் ஜனவரி 28 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
பயனடைந்த மாணவர்கள், அந்தந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் நெருங்கிய ஒத்துழைப்பினால் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்விற்கான நிதியுதவியினை ‘ஸ்ரீ முருங்கன் பிரதிபாலோகா நிகழ்ச்சித் திட்டம் - குருநாகல்’ வழங்கியது.
11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேவீஎஸ்எஸ் வித்தானகே யூஎஸ்பீ அவர் இந் நிகழ்விற்கு தேவையான வழிக்காட்டல்களை வழங்கினார். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் ‘ஸ்ரீ முருங்கன் பிரதிபாலோகா நிகழ்ச்சித் திட்டத்தின் அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.