11th March 2019 08:47:58 Hours
பள்லேகலேயில் அமைந்துள்ள 11ஆவது படைப் பிரிவின் 9ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இரவு நேர பிரித் வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் மகா சங்க தேரர்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் போன்றன கடந்த வெள்ளிக் கிழமை (01) இப் படைத் தலைமையகத்தில்; இடம் பெற்றது.
மேலும் இவ் வருடாந்த நிகழ்வுகள் இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் டி ஜெ நாணயக்கார அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டதோடு மகா சங்க தேரர்களால் வழிபாட்டு நிகழ்வுகள்; கௌரவத்தோடு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது இப் படைத் தலைமையக தளபதியவர்கள் மகா சங்க தேரர்களை வெற்றிலைகளை வழங்கி சம்பிரதாய பூர்வமாக் வரவேற்றார்
இந் நிகழ்வின் இறுதியில் இரவு நேர பிரித் வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதோடு 11ஆவது படைப் பிரிவினரால் தேரர்களுக்கான ஹீல் தானை எனப்படும் காலை உணவு வழங்கப்பட்டது.
இதன் போது உயிர் நீத்த படையினருக்கான வழிபாட்டு நிகழ்வுகளும் 11ஆவது படைப் பிரிவில் சேவையாற்றும் படையினருக்குமான ஆசீர்வாத வழிபாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன. Mysneakers | Men Nike Footwear