Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2023 19:55:44 Hours

10 வது விஜயபாகு காலாட் படையினரால் தென்னம் பிள்ளைகள் வழங்கல்

யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது காலாட்படை பிரிவின் 10 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் யாழ். மருதங்கேணி அம்பன் விளையாட்டுக்கழகத்தில் அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு 1500 தென்னம் பிள்ளைகள் சனிக்கிழமை (18 நவம்பர்) வழங்கப்பட்டது. மருதங்கேணி பிரதேச செயலகத்தின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 52 வது காலாட் படைபிரிவின் தளபதி அவர்கள் கலந்து கொண்டார்.

படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க மருதாங்கேணி ‘எஸ்.கே பண்ணை’ உரிமையாளர் தென்னம் பிள்ளைகளை இலவசமாக வழங்கினார். 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 522 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் வினியோக நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.

இந்த விநியோக நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.