Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2022 19:45:00 Hours

10 வது இலங்கை தேசியக் பாதுகாவலர் படையணியின் ஆண்டு தினத்தை முன்னிட்டு நோயாளிகளுக்கு இரத்ததானம்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 144 வது பிரிகேடின் 10 வது இலங்கை தேசியக் பாதுகாவலர் படையணியின் படையினர் தமது 32 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 75 பேரின் பங்கேற்புடன் அக்குரேகொட அபிநவரமாய விகாரையில் இரத்த தானம் வழங்கும் திட்டத்தை வியாழக்கிழமை (3) முன்னெடுத்தனர்.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இரத்தம் தேவைப்படுவதால் நாரஹேன்பிட்டிய மத்திய இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி மற்றும் பணியாளர்களுடன் இராணுவத்தினர் மற்றும் விகாரையிலுள்ள பிக்குகளின் ஒத்துழைப்புடன் இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 10 வது இலங்கை தேசியக் பாதுகாவலர் படையணியின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அப்படையணியின் 75 படையினர்கள் தானாக முன்வந்து இரத்தத்தை வழங்கினர். 10 வது இலங்கை தேசியக் பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி இத்திட்டத்தை மேற்பார்வையிட்டார்.

144 வது பிரிகேட் தளபதி, 144 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மற்றும் 10 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் போது உடனிருந்தனர்.