14th July 2023 21:41:36 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது காலாட் படைப்பிரிவின் 591 வது காலாட் பிரகேட்டின் 10 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் நந்திக்கடல் 59 வது காலாட் படைப்பிரிவு பயிற்சிப் பாடசாலையில் படையலகு பயிற்சியை திங்கட்கிழமை (10) நிறைவு செய்தனர்.
நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
இப் பயிற்சியில் 10 வது இலங்கை சிங்க படையணியில் 8 அதிகாரிகள் மற்றும் 259 சிப்பாய்கள் இரண்டு மாத கால பயிற்சியை பின்பற்றினர்.
இந்த பயிற்சியில் சிறந்த மாணவர், சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் சிறந்த உடற்தகுதி போன்ற துறைகளில் முறையே கெப்டன் பிகேஎச் வல்கம்பொல, லான்ஸ் கோப்ரல் டிஜிஎச்எம் ஜயரத்ன மற்றும் ரைபிள் சிப்பாய் எம்சிஎம் பீரிஸ் ஆகியோர் விருது பெற்றனர்.