15th July 2023 18:27:39 Hours
இராணுவ விளையாட்டு பணிப்பகம் இராணுவ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பெறுமதிமிக்க செயலமர்வை வெள்ளிக்கிழமை (ஜூலை 14) பனாகொட இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலை உடற்பயிற்சி கூடத்தில் ‘விளையாட்டுக்கான ஊட்டச்சத்து’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்தது.
விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மவுண்ட் லாவினியா உணவகத்தின் சமையல் அலுவல்கள் மற்றும் ஊக்குவிப்பு பணிப்பாளர் தேசபந்து திரு. பாப்லிஸ் சில்வா அவர்களால் இச் செயலமர்வு நடத்தப்பட்டதுடன், இராணுவத்தின் ஒவ்வொரு விளையாட்டுக் கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1000 க்கும் மேற்பட்ட இராணுவ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபற்றினர்.
இச் செயலமர்வின் போது, பங்கேற்பாளர்களுக்கு கேள்வி பதில் மூலம் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. இறுதியில் பிரிகேடியர் பீஎஏம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் தேசபந்து திரு. பாப்லிஸ் சில்வா அவர்கள் இராணுவத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அவருக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.