11th July 2023 20:14:30 Hours
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் 'பயிற்சி பல்கன் ஸ்ட்ரைக் I - 22/23' இன் முதலாவது தொடர் 22 ஜூன் 2023 அன்று லெபனான் கூட்டு நடவடிக்கை மையத்தில் இந்தோனேசிய பாதுகாப்பு படை பிரிவு, இலங்கை பாதுகாப்பு படை குழு, தென்சானிய இராணுவ பிரிவு,ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைத் தலைமையக ஆதரவுடன் தொடங்கியது. லெபனான் கூட்டு நடவடிக்கை மையத்தில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் மருத்துவமனை படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இரவு பகலான இப்பயிற்சியானது கூட்டத்தை மாதிரி கட்டுப்படுத்துதல், ராக்கெட் ஷெல் தாக்குதல், முகாமுக்குள் அனுமதியற்ற வாகனங்கள் வலுக்கட்டாயமாக நுழைதல், கலவரத்தை கட்டுப்படுத்துதல், அச்சுறுத்தல் மாதிரி போன்றவற்றில் கவனம் செலுத்தியது மற்றும் அனைத்து இலங்கை பாதுகாப்பு படை நிறுவன அதிகாரிகளுக்கும் பயிற்சி அளித்தது. இலங்கை பாதுகாப்பு படை குழு 4 கவசப் பணியாளர்கள், 20 கலகக் கட்டுப்பாட்டுப் பணியாளர்கள், வானொலி செயற்பாட்டாளர்கள், மருத்துவப் பிரதிநிதிகள் மற்றும் மோப்ப நாய்கள் தங்கள் மட்டத்தில் சிறப்பாகப் பங்களித்தனர்.