03rd November 2023 20:49:46 Hours
‘கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி -102 இன் விடுகை அனிவகுப்பு போர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டி.என்.ஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் ஆசிர்வாதத்துடன் ஒக்டோபர் 27 அன்று அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி சிப்பாய்கள் 57 பேர் மூன்று மாத கால பயிற்சியை பின்பற்றினர். 22 வது கஜபா படையணியின் லான்ஸ் கோப்ரல் எஸ்.எம்.எஸ்.திசாநாயக்க பாடநெறியின் சிறந்த மாணவருக்கான சான்றிதழை பெற்றுகொண்டார்.
இந் நிகழ்வில் போர் பயிற்சிப் பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர் லெப்டினன் கேணல் டபிள்யூ.எம்.எம்.டபிள்யூ.எச்.ஜீ பிடவல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.