29th March 2023 19:00:20 Hours
கெமுணு ஹேவா படையணியின் பிரிகேடியர் சமிந்த பாஸ்குவேல் அவர்கள் வியாழன் (மார்ச் 16) பங்கொல்ல ‘அபிமன்சல 3’ ல் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய தளபதி தனது புதிய அலுவலகத்தின் கடமையேற்பு நிகழ்வினை அடையாளப்படுத்தும் நிகழ்வாக புதிய ஆவணத்தில் தனது கையொப்பத்தை இடுவதற்கு முன்னர் ‘அபிமன்சல 3’ ல் பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
அவர் இந்த ஆரோக்கிய ஓய்வு விடுதியில் வசிக்கும் போர்வீரர்களை சந்திப்பதற்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் தேநீர் விருந்துபசாரத்தின் போது பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் இப்போது இலங்கை சிங்க படையணியின் தற்போதைய நிலைய தளபதி பிரிகேடியர் சமிந்த திப்பொட்டுகேவுக்குப் பின் இப் பதவியினை ஏற்றுக்கொண்டுள்ளார்.