Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2023 09:36:06 Hours

ஹலம்பேவெவ ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் இயங்கும் 62 வது காலாட் படைப்பிரிவின் 622 வது காலாட் பிரிகேட் படையினரின் அனுசரணையுடன், தென்னிலங்கை நன்கொடையாளர்களால் மு/ஹலம்பேவெவ ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கு ரூபாய் 400,000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்களை வெலிஓயா ஹலம்பேவெவ தர்மதீப வெலிமலுவ விகாரையில் வெள்ளிக்கிழமை (மே 27) வழங்கப்பட்டது.

இராணுவ ஒருங்கிணைப்பின் மூலம் கொழும்பைச் சேர்ந்த திரு.சுமுது பெரேரா, திரு. மஞ்சுளா பாமுன்னாராச்சி மற்றும் திரு.இரேஷ் தயாரத்ன ஆகிய மூவரும் இந்த நன்கொடைக்கு இணை அனுசரணை வழங்கினர். இத் திட்டத்தின் கீழ் பாடசாலை பை, காலணிகள், புத்தகங்கள், பென்சில்கள், பேனாக்கள், எழுதுபொருட்கள் போன்ற தலா சுமார் 8000 ரூபா பெறுமதியான பாடசாலை பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.

62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் 622 வது வது காலாட் பிரிகேடின் தளபதி கேணல் கேஎச்என்யூபி கொல்லங்கஹாபிட்டிய யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 9 வது கஜபா படையணியின் படையினரால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது

622 வது பிரிகேட் தளபதி கேணல் கேஎச்என்யூபி கொல்லங்கஹாபிட்டிய யூஎஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.