04th November 2023 22:37:40 Hours
ஹட்டன் புனித கேப்ரியல் தேசிய பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள், பாடசாலையின் அதிபர் திருமதி எச்டபிள்யூடி வீரதுங்க அவர்களின் அழைப்பின் பேரில் (திங்கட்கிழமை) 2023 ஒக்டோபர் 30 பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கல்லூரியை வந்தடைந்த இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதியை அதிபர் மற்றும் மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரியில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பிரதித் தளபதி தனது உரையில் பாடசாலையின் கல்வியை பிரதிபலிக்கும் வகையிலும், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் விரிவான முயற்சிகளுக்கும் அதிபர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டை தெரிவித்ததுடன், தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வு சாதனையாளர்களுக்கு அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. மேலும் பரிசளிப்பு விழாவின் போது, பாடசாலை மாணவர்களிடையே முதன்மை அம்சங்களாகப் புகுத்தப்பட வேண்டிய ஒழுக்கம் மற்றும் அறிவு குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியில், பிரதித் தளபதி ஆசிரியர்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.