Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th April 2023 18:55:29 Hours

வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகம் இலங்கையின் அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம்

வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீபீஏ பெரேரா எச்டிஎம்சி பீஎஸ்சி அவர்கள் திங்கட் கிழமை (ஏப்ரல் 24) குகுலேகங்க இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி மற்றும் நலன்புரி தொடர்பான புதுப்பிப்புகளைப் பார்வையிடுவதற்காக விஜயத்தை மேற்கொண்டார்.

பிரதான நுழைவாயிலை வந்தடைந்த சிரேஷ்ட அதிகாரிக்கு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர், பணிப்பாளர் நாயகம் வளாகத்தை பார்வையிடுவதற்கு முன், வருகையின் அடையாளமாக வளாகத்தில் மரக்கன்றை நட்டுவைத்தார். அதற்கமைய, அன்றைய தினம் ஆரம்பமான தென் சூடான் நிலை II வைத்தியசாலைக்கான பயிற்சி நெறி நெறி – கட்டம் 10 இல் பங்குபற்றும் படையினர்களுக்கு ஆரம்ப உரையை கௌரவ பிரதம அதிதி நிகழ்த்தினார்.

இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் முன், மேஜர் ஜெனரல் பீபீஏ பெரேரா எச்டிஎம்சி பீஎஸ்சி அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டார்.