22nd September 2023 18:44:54 Hours
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கொமடோர் எம்டி ஷபியுல் பாரி (என்டி) பீஎஸ்சீ பிஎன் அவர்கள் வெள்ளிக்கிழமை (22) காலை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது வெளிச்செல்லும் பாதுகாப்பு இணைப்பாளர் இலங்கையில் தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்திற்காக இராணுவத் தளபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இராணுவத்தின் சிறந்த புரிதலுக்கும் சகோதரத்துவத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால உறவுகளை எடுத்துக் கூறிய அவர்கள், அத்தகைய நல்லெண்ணம் மற்றும் உறவுகளை மேலும் வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டினார்கள்.
நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் இச்சந்திப்பு நிறைவுற்றது.