Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 15:00:52 Hours

வெளிச்செல்லும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி 24 காலாட் படைப்பிரிவிற்கு விஜயம்

06 ஏப்ரல் 2024 அன்று 24 வது காலாட் படைப்பிரிவில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்களுக்கு பிரியவிடைமரியாதை செலுத்தப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதிக்கு முதலில் நுழைவாயிலில் வாகன தொடரணி மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து படைப்பிரிவின் பணியாளர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டார்.

மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் படையினருக்கான உரையில் தனது பதவிக்காலத்தில் வெளிப்படுத்திய சிறந்த நடத்தை மற்றும் ஒத்துழைப்புக்காக அனைத்து நிலையினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தினை தொடர்ந்து அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன்பின்னர், தளபதி அவர்கள் தீகவாபிய திட்டத்தில் படையினருக்கு உரையாற்றியதுடன், ஸ்தூபியின் கட்டுமானப் பகுதியில் செங்கற்களை நாட்டி வைத்தார். அதிகாரிகளின் உணவகத்தில் நடந்த பிரியாவிடை விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவு செய்யப்பட்டன.

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள். அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.