Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2021 19:12:51 Hours

விஷேட படையணியின் புதிய தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

இராணுவத்தின் 1 படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் 2021 ஒக்டோபர் 23 ஆம் திகதி விசேட படையணியின் 10 வது தளபதியாக நாவுலவிலுள்ள அப்படையணி நிலையத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, விஷேட படையணியினரால் அவருக்கு நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது,

பின்னர் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற மகா சங்கத்தினரின் ‘செத்பிரித்’ பாராயணத்தை தொடர்ந்து, மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார். மேலும் அங்குள்ள அதிகாரிகள் மத்தியியல் அவர் ஆற்றிய உரையின் போது, விஷேட படைகளை மேலும் மேம்படுத்துவதற்கான தனது எதிர்காலத் திட்டங்களை விளக்கினார்.

பின்னர், படையணியின் தளபதி படைத் தலைமையக வளாகத்தில் நினைவுச் சின்னமாக மரக்கன்று ஒன்றினை நட்டதுடன் போர் வீரர்களின் நினைவுத்தூபிக்கு அஞ்சலியும் செலுத்தினார்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதி,துப்பாக்கி சூட்டு பயிற்சி பாடசாலை தளபதி , படையணி நிலைய தளபதி, சிறப்புப் படை பிரிகேட் தளபதி, சிரேஷ்ட படையணி மன்ற உறுப்பினர்கள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.