Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2024 17:15:29 Hours

விஜயபாகு காலாட் படையணி அதிகாரிகளின் பயிற்சி நாள் நிறைவு

விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான அதிகாரிகள் பயிற்சி நாள் 2024 மார்ச் 14 ஆம் திகதி விஜயபாகு காலாட் படையணியில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

படையணி விளையாட்டு மைதானத்தில் காலை உடற் பயிற்சியுடன் அன்றைய பயிற்சிகள் ஆரம்பமாகியதுடன், அதனைத் தொடர்ந்து அணிநடை பயிற்சி மற்றும் தகவல் விரிவுரை செயலமர்வு இடம் பெற்றது. அன்றய நாளின் சிறப்பம்சமாக "த சல்யூட்" பல்லூடக மண்டபத்தில் டைனர்ஸ் கிளப் அமர்வு நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின் பட்டயப் பொறியியலாளர் சிந்தக பாலசூரிய அதிதியாகப் பங்கேற்று, “விவசாய பாதுகாப்பு உத்திகள்: மோதல் காலங்களில் உணவுப் பாதுகாப்பு” என்ற தலைப்பில் சிற்ப்பான விரிவுரையை ஆற்றினார். அதிகாரிகள் பிரதம பேச்சாளருடன் தங்கள் அறிவை பகிர்ந்து கொண்டனர்.

இந்த பயிற்சி நாள் நிகழ்ச்சியில் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.