12th June 2023 18:55:36 Hours
இராணுவ வழங்கல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்ஆர்டபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎச்ஜேபி வணிகசேகர யுஎஸ்பீ ஆகியோர் பணிநிலை அதிகாரிகளுடன், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வழங்கல் மற்றும் நிர்வாக பிரச்சினைகளை அறிந்துக் கொள்வதற்கு வெள்ளிக்கிழமை (09) விஜயம் செய்தனர். வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள், படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் வன்னி பாதுகாப்புப் படை தலைமையக வழங்கல் படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்ஆர்டபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎச்ஜேபி வணிகசேகர யுஎஸ்பீ ஆகியோரை வரவேற்றதுடன் நுழைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
56 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி அவர்கள் சுருக்கமான அறிமுகத்துடன் அவர்களை அதிகாரப்பூர்வமாக வரவேற்றார். பின்னர் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் அந்தந்த அமைப்புகளின் வழங்கல் மற்றும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.புறப்படுவதற்கு முன், பணிப்பாளர் நாயகங்கள் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தமது கருத்துக்களை பதிவிட்டனர்.