12th April 2024 16:52:03 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக புதன்கிழமை (ஏப்ரல் 10) அனுராதபுரம் "அபிமன்சல - 1"க்கு விஜயம் செய்தார்.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகளுடன் நலநிலையத்திற்குச் சென்று நலம் விசாரித்ததுடன், புத்தாண்டு வாழ்த்துச் சின்னமாக அவர்களுக்கு விசேட பரிசுப் பொதிகளையும் வழங்கினார்.
அதன் பின்னர், தளபதி மற்றும் குழுவினர் தேநீர் விருந்தின் போது அவர்களுடன் உரையாடினர். வன்னி தளபதி புறப்படுவதற்கு முன்னர் விருந்தனர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குழுவும் இந்த விஜயத்துடன் இணைந்திருந்தது.