22nd March 2024 12:46:50 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் முதல் தொகுதி ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு பயிற்சி 18 மார்ச் 2024 அன்று வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் நிறைபெற்றது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் இராணுவத்தினரிடையே பழமையான தற்காப்பு நுட்பங்கள், உடல் வலிமை, பொறுமை, தைரியம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இப்பாடநெறி 30 வீரர்களின் பங்கேற்புடன் 19 பெப்ரவரி 2024 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ மற்றும் இலங்கை இராணுவ அங்கம்பொர குழுவின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
நிறைவு விழாவில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாடநெறியின் தலைமைப் பயிற்றுவிப்பாளருக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்