14th December 2022 18:54:57 Hours
இந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா, சீனா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் குழு ஒன்று வியாழன் (13) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் இராஜதந்திரிகளுக்கு பாதுகாப்பு, சமூக அபிவிருத்தி, சிவில் இராணுவ ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் அமைதியை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் வன்னிப் படையினரின் தற்போதைய பாத்திரங்கள் குறித்து தூதுவர்களுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
கலந்துரையாடலின் இறுதியில், மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் வருகை தந்த இராஜதந்திரிகளுக்கு அடையாள நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.