22nd September 2023 20:05:03 Hours
மலேசியாவின் பெஸ்ட் விஷஸ் பவுன்டேஷன் அமைப்பின் ஆலோசகரும் இணைப்பாளருமான வண. கலாநிதி போதகம சந்திம தேரர் அவர்களின் அனுசரணையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் 500 வரிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும், கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர். சுமார் ரூ. 2.7 மில்லியன் மதிப்புள்ள நன்கொடையை வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 21) வழங்கினர்.
வவுனியா கலாசார மண்டபத்திற்கு பயனாளிகளை அழைத்து மலேசிய பிரதிநிதிகள் நன்கொடையாளர்கள், தமது ஆலோசகர்களுடன் இணைந்து அந்த நிவாரணப் பொதிகளை மாணவர்களுக்கும் அந்த கர்ப்பிணிப் பெண்களுக்கும் வழங்கியதுடன், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, , 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி, பிரிகேடியர் பொது பணி, 561 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.