14th July 2023 00:35:43 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ அவர்களின் முயற்சியால் முழுமையாக புனரமைக்கப்பட்ட ஸ்குவாஷ் மைதானம், டென்னிஸ் மைதானம் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் உணவகம் படையினரின் பாவனைக்காக செவ்வாய்க்கிழமை (11) கையளிக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட மைதானங்களில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டி, இராணுவத்தில் விளையாட்டு ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் இடம்பெற்றது. வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் ஆகியோர் மீள்சீரமைப்புப் பணிகளை நெருக்கமாக ஒருங்கிணைத்தனர்.
ஒரு சில வாரங்களுக்குள், இராணுவத்தில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் இத்திட்டத்தை மேற்கொண்டனர். வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள், புனரமைக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்ட் உணவகத்தை திறந்துவைத்துடன் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுடன் உரையாடினார்.
கண்காட்சிப் போட்டியின் முடிவில், வீரர்கள், நடுவர்கள் மற்றும் திட்டங்களின் வெற்றிக்கு பங்களித்தவர்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டார்கள்.