19th April 2023 20:01:14 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளின் பேரில் இராணுவத்திற்குக் கிடைத்த அனுசரணையின் மூலம் 11 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரின் ஒருங்கிணைப்பில், வெஹரதென்ன கிராம சேவை பிரிவில் வசிக்கும் வறிய குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் 2023 ஏப்ரல் 5 ம் திகதி வழங்கப்பட்டன.
இத் திட்டம் சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் பாடசாலை தொடக்கத்தை முன்னிட்டு வெஹரதென்ன ஸ்ரீ ரத்னசார விகாரைக்கு அழைக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு தலா 10,000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும், தலா 6,000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்த திட்டத்திற்கான முழு அனுசரணையையும் வன்னி வெஹரதென்ன மக்களின் கஷ்டங்களை உணர்ந்த கெளே புளியங்குளம் வண. ரத்ன தேரர் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஹாங்காங் பௌத்த சங்கம் மற்றும் குளோரியஸ் சன் நிறுவனத்தின் டாக்டர் அஞ்சு, வண. பேராசிரியர் தம்மஜோதி தேரர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர் ஏ ஜே என் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, 62 வது காலாட் படைப்பிரிவின் சிவில் அலுவல்கள் அதிகாரி, 11 வது கெமுனு ஹேவா படையணியின் ஏ கம்பனி கட்டளையாளர் மற்றும் போகஸ்வெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கலந்துகொண்டனர்.