Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2023 09:21:35 Hours

லெபனான் 14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவினருக்கு சூழ்நிலை விழிப்புணர் தொடர்பான பயிற்சி

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில் நவம்பர் 13-14 திகதிகளில் லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படையின் 14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் படையினருக்கு சூழ்நிலை விழிப்புணர்வு பயிற்சி மற்றும் வரைபட வாசிப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

குழு கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிபீஐடி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி அவர்களின் மேற்பார்வையில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

அந்த பயிற்சியில் இலங்கைப் பாதுகாப்பு படை குழுவினருக்கு ஒத்திகை செய்யப்பட்டு, தந்திரோபாய நடவடிக்கை மையம் மற்றும் கூட்டு நடவடிக்கை மையம் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதாகும்.

பயிற்சி அமர்வின் போது, படையினர் வரைபட திசை முகப்படுத்தல், முன் திசை கோள் காணுதல் தகவல்களைப் பகிர்தல், தூரத்தை அனுமானித்தல், இரவு அவதானிப்புகள், கண்காணிப்பு இடுகைகள், கடமைகள், முறையான தொடர்பாடல் நடைமுறை பயிற்சி மற்றும் சம்பவ அறிக்கை தயாரித்தல், திட்ட வரைபடம் ஆகியவற்றில் பயிற்சிகளை பெற்றனர்.

சரியான நேரத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் படையினரிடம் நம்பிக்கையை கட்டியெழுப்புதல், அனைத்தையும் துல்லியமாக மதிப்பிடுவதற்கு பயனுள்ள அமைப்புகளை உருவாக்குதல் போன்ற இப் பயிற்சியை லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தின் துணை தளபதி பாராட்டினார்.