09th April 2024 16:14:53 Hours
லெபனான் ஐநா அமைதி காக்கும் படையின் 15 வது இலங்கை பாதுகாப்பு படை கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டிகேடி விதானகே ஆர்எஸ்பீ அவர்கள் 05 ஏப்ரல் 2024 அன்று நகோராவில் உள்ள ஸ்ரீ பேஸ் முகாமில் கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய கட்டளை அதிகாரி மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் கடமைப் பொறுப்பேற்பதற்கான உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். புதிய கட்டளை அதிகாரிக்கு எதிர்கால முயற்சிகளுக்கு அனைத்து அதிகாரிகளும் சிப்பாய்களும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இலங்கை பாதுகாப்பு குழுவானது லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்திற்கு நகோராவில் பாதுகாப்பை வழங்குதல், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு மற்றும் துணைக் கடமைகளை நிர்வகித்தல் மற்றும் முகாம் வாயில்கள் வழியாக அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்துதல். என்பன கடமைகள் ஆகும். இந்தக் குழுவில் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் உட்பட 125 படையினர் உள்ளனர்.