14th January 2024 18:08:56 Hours
16 வது கஜபா படையணி படையினர் மற்றும் இலங்கை கடற்படையின் படையினர் நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் கூட்டுப் பயிற்சியில் வியாழன் 2024 ஜனவரி 11 அன்று ஈடுபட்டனர்.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 143 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 16 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இப் பயிற்சி நடைபெற்றது.
மின் உற்பத்தி நிலைய பயிற்சிக்கு மேலதிகமாக, படையினர் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.