10th September 2018 16:05:26 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியைச் சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து ஏழு வருடங்களாக சம்பியன்சிப் பெற்றதையிட்டு இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இராணுவ பொதுசேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டப்ள்யூ.ஆர். பலிஹகார அவர்களினால் இந்த வீராங்கனைகளை கௌரவித்து இவர்களுக்கு ரக்பி விளையாட்டிற்கு பாவிக்கும் 25 காலணிகள் மற்றும் 25 விளையாட்டு உடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுகள் (4) ஆம் திகதி இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன.
நிகழ்வின் போது, கோப்ரல் கே.டப்ள்யூ.எஸ் ரந்தேவ இலங்கை இராணுவத்தின் 110 மீ தடை ஹார்லட் சாம்பியன் தடகள மற்றும் தேசிய மட்டத்தில் 02 வது தரவரிசைப் பெற்ற வீராங்கனைக்கு 25,000/= பெறுமதிமிக்க காலணிகள் (ஸ்பைசஷ்) பரிசாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இராணுவ பொது சேவைப் படையணியைச் சேர்ந்த கேர்ணல் சானக வேரஹொட, லெப்டினன்ட் கேர்ணல் நலின் டீ சில்வா, கெப்டன் டீ.ஜி.ஜே பந்துள இணைந்திருந்தனர். Buy Sneakers | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov