Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2022 18:56:59 Hours

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 200 இற்கும் மேற்பட்ட இராணுவதினர் இரத்தம் வழங்கல்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் 26 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய மனிதாபிமான பரிமாணத்தை வழங்கும் வகையில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 200 சிப்பாய்களைக் கொண்ட குழுவினர் யாழ். கடைக்காடு 55 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் இடம் பெற்ற இரத்தான முகாமில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு செவ்வாய்க்கிழமை (13) இரத்ததானம் செய்தனர்.

படைப்பிரிவு தலைமையகம், 551, 552 மற்றும் 553 வது காலாட் பிரிகேட்கள் மற்றும் அதன் படையலகுகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மனிதாபிமானத் தன்மையைக் கருத்தில் கொண்டு இரத்த தானம் செய்தனர். யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய ஊழியர்கள் இராணுவத்தினரைப் பாராட்டியதுடன், அவர்களின் ஆண்டு நிறைவை ஒட்டிய 55 வது படைப்பிரிவின் முயற்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஊழியர்களுடன் இத்திட்டத்தை ஒருங்கிணைக்குமாறு 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் வைத்திய அதிகாரிக்கு அறிவுறுத்தியிருந்தார்.