Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2024 15:01:00 Hours

யாழ் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு மடு மாதா வருகை

2024 ஏப்ரல் 06 முதல் 30 வரையான யாழ் குடாநாட்டிற்கான மடு மாதாவின் திருவுருவ ஊர்வலம் அண்மையில் பலாலி ஊரணி புனித அந்தோனியார் தேவாலயத்தை சென்றடைந்தது.

இந்த நிகழ்வின் போது, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தேவாலயத்திற்கு வருகை தந்து பக்தர்களுடன் இணைந்து மாதாவை வரவேற்றார். இதன் போது 300 இராணுவத்தினர், கத்தோலிக்க பக்தர்களுடன் இணைந்து யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக சாலையின் இருபுறமும் அணிவகுத்து, மடு மாதாவுக்கு அன்பான மற்றும் மரியாதையுடனான வரவேற்பை வழங்கினர்.

இதன்போது அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் மற்றும் ஏனைய பாதிரியார்களின் மத ஆசிர்வாதத்தில் பங்கேற்று யாழ் தளபதி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்மீக ஆசீர்வாதங்களைத் பெற்றுகொண்டனர்.