24th April 2024 17:58:15 Hours
மெட்ரோபொலிட்டன் தொழிநுட்ப தனியார் நிறுவனத்தின் மூலம் வில்லையற்ற கெமரா தொழில்நுட்பம் மற்றும் வீடியோ கெமரா தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாள் பட்டறை 2024 ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
படையினரிடையே கெமரா மற்றும் வீடியோ கெமரா தொழில்நுட்பத்தில் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதற்காக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பிவிக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பட்டறை நடாத்தப்பட்டது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 10 அதிகாரிகள் மற்றும் 65 சிப்பாய்கள் இந்த பட்டறையில் கலந்து கொண்டனர். கெமரா தொழில்நுட்பம், வீடியோ கெமரா தொழில்நுட்பம், நேரடி ஒளிபரப்பு, வெளிப்புற புகைப்படம் எடுத்தல், பிற முக்கிய பகுதிகள் பற்றிய கோட்பாடு மற்றும் நடைமுறை அறிவை இந்த பட்டறையில் வழங்கப்பட்டது.
நிறைவு விழாவில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், மெட்ரோபொலிட்டன் (Metropolitan) தொழில்நுட்ப தனியார் நிறுவன பணிப்பாளர் திரு. தஸ்லிம் ரஹ்மான் மற்றும் மெட்ரோபொலிட்டன் தொழிநுட்ப தனியார் நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.