Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2023 20:03:24 Hours

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 27 வது ஆண்டு தினக் கொண்டாட்டம்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 27வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு திங்கட்கிழமை (ஜூன் 19) மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய நிகழ்வுகள் இடம் பெற்றன.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வளாகத்தில் உள்ள விகாரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற போதி பூஜையில் கலந்து கொண்டனர், அங்கு யாழ்குடாநாட்டில் சேவையாற்றும் படையினர்களுக்கு ஆசிகள் வழங்கப்பட்டன.

ஆண்டு நிறைவு நிகழ்வின் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களுக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மதிய உணவில் கலந்து கொண்டதுடன், மாலை இசை நிகழ்ச்சியுடன் இந் நிகழ்ச்சி முடிவடைந்தது.