Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2023 17:20:08 Hours

யாழ். படையினர் நட்புறவு கிரிகெட் போட்டியில் பங்கேற்பு

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் வடக்கு முன்னரங்க பராமரிப்பு பிரதேசம் மற்றும் அதன் கட்டளையில் உள்ள படையலகுகளின் படையினரிடையே ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கத்திற்காக 3 வது இலங்கை சமிக்ஞை படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி 27 பெப்ரவரி 2023 அன்று யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது.

இது யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட அவர்களின் எண்ணக்கருவுக்கமைய ஏற்பாடு செய்யப்பட்டது. இப் போட்டிகளில் 14 கிரிகெட் அணிகள் போட்டியிட்டதுடன் 3 வது இலங்கை சமிக்ஞை படையணி மற்றும் 4 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணி இறுதி போட்டியில் போட்டியிட்டன. இப் போட்டியில் 4 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணி ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றனர். பெண்கள் பிரிவில் 7 வது இலங்கை மகளிர் படையணி வெற்றி பெற்றதுடன் 4 வது இலங்கை மருத்துவப் படையணிக்கு இரண்டாம் இடத்திற்கான கோப்பை வழங்கப்பட்டது.

வடக்கு முன்னரங்க பராமரிப்பு பிரதேசத் தளபதி மேஜர் ஜெனரல் கிளிபோர்ட் டி சொய்சா, பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் தம்மிக்க கருணாபால மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர். கிரிக்கெட் போட்டியின் வெற்றிக்கு அதிகாரிகள் மற்றும் படையினர் தங்களின் அதிகபட்ச ஆதரவை வழங்கினர்.