Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2023 09:48:51 Hours

யாழ். படையினரால் சுன்னாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உட்கட்டமைப்பு புனரமைப்பு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட் பிரிகேடின் 4 வது இலங்கை சிங்கப் படையணி ஓகஸ்ட் 21 அன்று சுன்னாலை (தெற்கு) அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் புனரமைப்புப் பணிகளுக்கு தமது மனிதவளத்தை வழங்கினர்.

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏஎம்பி யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பாடசாலையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

“வன்னி எய்ட் கனடா” அமைப்பின் நிதியுதவியுடன் 4 வது இலங்கை சிங்கப் படையலகு பாடசாலையின் பாழுதடைந்த கட்டிடங்கள், சுகாதார வசதிகள், பணியாளர்கள் ஓய்வு அறை, பிரதான நுழைவாயில், தண்ணீர் தாங்கி மற்றும் சுற்றுமதில் ஆகியவற்றை புனரமைத்தது.

இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டு இராணுவத்தினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டினர்.