22nd November 2023 23:12:50 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட் பிரிகேடின் 4வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் சனிக்கிழமை (நவம்பர் 18) யாழ் அல்வாய் இலங்கைக் கல்லூரி வளாகத்தில் சிவில் - இராணுவ ஒத்துழைப்பு திட்டமாக சுத்தம் செய்யும் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படையினருடன் இணைந்து தமது பாடசாலை வளாகத்தை துப்புரவு செய்யும் பணியை உற்சாகத்துடன் நிறைவு செய்தனர்.
பாடசாலை நிர்வாகம் இராணுவத்தின் முயற்சியைப் பாராட்டியதுடன், அனைவரினது ஆதரவிற்கு நன்றி தெரிவித்தனர்.