Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2023 18:40:38 Hours

யாழ்ப்பாணப் படையினர் ஏ9 வீதியில் மரக்கன்றுகள் நாட்டல்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு 55 காலாட் படைப்பிரிவின் 23 வது கெமுனு ஹேவா படையினர் 25 தென்னம் பிள்ளைகளை முகமாலை பகுதியின் ஏ9 வீதியின் இருபுறமும் திங்கட்கிழமை (5) நாட்டினர்.

இப் படையலகினர் இதற்கு முன்னர் இதே பகுதியின் பிரதான வீதியின் கரையில் நிழல் தரும் மருதை, வேம்பு என்பவற்றையும் நாட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்எம்எம்பி சம்பத் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு தென்னம் பிள்ளைகளை நட்டனர்.