Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd November 2023 20:48:36 Hours

யாழ்.படையினரால் முருகன் கோவிலில் சிரமதான பணி

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப் பிரிவின் 521 வது காலாட் பிரிகேட்டின் 4 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் பிரதேசத்தில் இன மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் புலோலி முருகன் ஆலயத்தில் சனிக்கிழமை (ஒக்டோபர் 28) சிரமதான பணியை மேற்கொண்டனர்.

இச் சமூகத் திட்டத்தில் இராணுவத்தின் பங்களிப்பை பிரதம சிவாச்சாரியர் பாராட்டியதுடன், இலங்கை இராணுவத்திற்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.