11th April 2024 15:05:49 Hours
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி, மென்ட்போர்ட் சார்வதேச பாடசாலையானது 2024 ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி தனது 2வது ஆண்டு நிறைவை ‘ஒளிர்வதற்கு அதிகாரமளித்தல்’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடியது.
இந்த நிகழ்வில் கெளரவ அதிதியாக யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார். மங்கள விளக்கை ஏற்றிவைத்து, விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கலுடன் நிகழ்வு ஆரம்பமானது. மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பாடல்கள், நடனங்கள், பேச்சுக்கள், நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் அன்றைய தினத்தை வண்ணமயமாக்கினர்.
யாழ். தளபதி தனது உரையின் போது, கல்வியின் முக்கியத்துவம், பெற்றோரின் ஈடுபாடு மற்றும் கல்விக்கான மாணவர்களின் ஊக்கம் ஆகியவற்றை வலியுறுத்தியதுடன் இளம் திறமைகளை வளர்ப்பதில் கல்லூரியின் முயற்சிகளை பாராட்டினார்.
வடமாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பட்ரிக் நிரஞ்சன், மதகுருமார்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.