Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2024 16:31:49 Hours

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கல்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை ஒட்டி 36 சிவில் ஊழியர்களுக்கு தலா ரூ. 5000.00. பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை 2024 ஏப்ரல் 10 ஆம் திகதி வழங்கினர்.

இந் நிகழ்வு மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைப்பெற்றது. சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.